For Quick Alerts
For Daily Alerts
Just In
புத்தாண்டில் குடித்து விட்டு கும்மாளம்.... தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபானம் மூலம் ரூ.211 கோடி லாபம் கிடைத்தது.
Recommended Video
02-01-18 News Wallet காலை செய்திகள்- வீடியோ
சென்னை: புத்தாண்டுக்கு முந்தைய தினமும், புத்தாண்டு தினத்தன்றும் தமிழகத்தில் ரூ.211 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
தமிழக நெடுஞ்சாலையில் 500 மீட்டருக்குள் உள்ள மதுபான கடைகள் கடந்த ஏப்ரல் மாதம் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபானங்களின் விலையும் 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
பொதுவாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது மது விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில் புத்தாண்டுக்கு முந்தைய தினமும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் மது விற்பனை ரூ.211 கோடிக்கு நடைபெற்றது.
கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரூ. 175 கோடிக்கு விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு மதுபானங்களின் விலையை உயர்த்தியபோதும் ரூ.36 கோடி கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது.
Comments
English summary
Liquor sales in Tamilnadu increases this year by Rs. 36 crores when comapared with last year, though liquor price hike .
Story first published: Tuesday, January 2, 2018, 8:00 [IST]