குடிமக்களே உஷார்.. அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தி... டாஸ்மாக் கடைகளுக்கு லீவு அறிவிப்பு !
சென்னை: அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அதனைச் சேர்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சேர்ந்த பார்கள், எப்எல்3ஏ உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
அன்றைய தினத்தில் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி மது விற்பனை செய்தால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மாவட்ட கலெக்டர்களின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.