உங்க வீடு சிட்லபாக்கமா.. நாளைக்கு கரண்ட் கட்.. கார்த்தால சட்னியை சீக்கிரமா அரைச்சு வச்சுக்கங்க!
மாதாந்தரப் பராமரிப்புப் பணி காரணமாகச் சென்னையில் சில இடங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது" என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை: மாதாந்தரப் பராமரிப்புப் பணி காரணமாகச் சென்னையில் சில இடங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது" என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஒருநாள் பராமரிப்பு பணி காரணமாக காலையில் இருந்து மாலை வரை மின்தடை செய்யப்படும். பராமரிப்புப் பணி முடிவடைந்த பின், 4 மணிக்கு மேல் மீண்டும் மின் சேவை மீண்டும் தொடங்கப்படும்.
தற்போது சென்னையில் மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிட்லபாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சிட்லபாக்கம், ஒட்டியம்பாக்கம், விவேகானந்தா நகர், இந்திரா நகர், அரசன்கழனி.
மேலும் பெரும்பாக்கம் பகுதியில் கைலாஷ் நகர், அந்தோணி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சௌமியா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, காந்தி நகர், நூக்கம்பாளையம் ரோடு. மேடவாக்கம் பகுதியில் பாபு நகர், பாம் கார்டன், நீலா நகர், காயத்ரி நகர், ஐஸ்வர்யா நகர், சிபிஐ காலனி, வேளச்சேரி மெயின் ரோடு. மின்தடை செய்யப்படும்.
அதேபோல் ஜல்லடியன்பேட்டைபகுதியில் ஜெயச்சந்திரன் நகர், நெசவாளர் நகர், வரதராஜபுரம். பம்மல் பகுதியில் பி.வி நகர், இபி காலனி, ஸ்ரீனிவாசபுரம், தென்றல் நகர், கணபதி நகர், காயிதே -இ-மில்லத் நகர், பசும்பொன் நகர், பாலாஜி நகர், திருநகர், பவானி நகர், கமிஷனர் காலனி, விநாயகா நகர், சித்திரை நகர், பத்மநாபா நகர். இடங்களில் மின் தடை செய்யப்படும்.