எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும்: செங்கோட்டையன்
எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் குறித்து சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் தன்னார்வ அமைப்பின் சார்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் குடிமராமத்து மற்றும் நீர்நிலை மேம்பாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றார். மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க ஒருவாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.