For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்த பக்கம் ஒரு பாட்டி.. இந்த பக்கம் ஒரு பேத்தி.. நடுவுல ரியா.. சபாஷ் மக்களே..இதுதான் அதிரடி மாற்றமோ

வித்தியாசமான மாற்றத்தை இந்த தேர்தல் ஏற்படுத்தி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி

    சென்னை: எப்போதுமே இல்லாத பல முக்கிய திருப்பங்களையும், நல்மாற்றங்களையும் இந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தல் ஏற்படுத்தி உள்ளது.. 79 வயது பாட்டியும் ஜெயித்துள்ளார்.. 21 வயது பேத்தியும் ஜெயித்துள்ளார் என்றால்.. மாற்றம் எங்கேயோ நிகழ ஆரம்பித்துவிட்டது என்றே பொருள்.

    27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது.. 2 கட்டமாக 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடந்த தேர்தலின்போது பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று மொத்தம் 315 மையங்களில் நடந்தது.

    கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்கினர்.

    கொங்கு மண்டலத்தில்.. அதிரடி காட்டிய திமுக.. அப்பாடான்னு தப்பி பிழைத்த அதிமுக.. பரபர தகவல்கள் கொங்கு மண்டலத்தில்.. அதிரடி காட்டிய திமுக.. அப்பாடான்னு தப்பி பிழைத்த அதிமுக.. பரபர தகவல்கள்

    சந்தேக கண்கள்

    சந்தேக கண்கள்

    எப்பவும் இல்லாமல் இந்த முறை தேர்தல் மிக மிக வித்தியாசமாக நடந்தது.. வேட்பாளர்களுக்குள் கடுமையான போட்டி நடந்தது.. இளம் தலைமுறையினர் ஏராளமானோர் வரிந்து கட்டிக் கொண்டு மனு தாக்கல் செய்தனர்.. 21, 22 வயதுக்காரர்களுக்கு என்ன அரசியல் தெரிந்துவிட போகிறது.. தொகுதி மக்களிடம் எப்படி அணுக போகிறார்கள் என்ற சந்தேகக்கண்கள் வேட்பு மனு தாக்கலின்போதே ஆரம்பித்தன.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    ஆனால், இவர்கள் அளித்த பேட்டிகளும் தங்கள் பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருந்த புரிதலும்தான் இளைஞர்களை பெருமளவு வெற்றி என்ற முகப்பில் கொடு வந்து நிறுத்தி உள்ளது. 21 வயதே ஆன கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி கிருஷ்ணகிரியில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

    உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 'மெர்சல்' வெற்றி- 2011 ஐவிட கூடுதல் இடங்கள்!உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 'மெர்சல்' வெற்றி- 2011 ஐவிட கூடுதல் இடங்கள்!

    வீரம்மாள்

    வீரம்மாள்

    அதேபோலதான் 79 வயது பாட்டியின் வெற்றியும்.. 60 வயதுக்கு மேல் அரசியலில் நின்றாலே, இவர்கள் இந்த வயதில் என்னத்த தொகுதிக்கு பெரிசா செய்துவிட போகிறார்கள் என்ற சலிப்பை தருவது இயல்பு.. ஆனால் மதுரையை சேர்ந்த வீரம்மாள் அபார வெற்றி பெற்று முன்னிலையில் வந்து நின்றுள்ளார்.. இது ஏதோ அதிர்ஷ்டத்திலோ சைக்கிள் கேப்பிலோ வந்த வெற்றி கிடையாது.. இதற்கு முன்பு 2 முறை போட்டியிட்டு தோற்று.. 3-வது முறையாக விடாமுயற்சியால் வெற்றி பெற்றுள்ளார் வீரம்மாள்.. இந்த பாட்டி தென் மாவட்டம்.. 21 வயது பேத்தி மேற்கு மாவட்டம்.. என புதிய வரலாறு படைத்துவிட்டனர்.

    திருநங்கை

    திருநங்கை

    இவர்களுக்கு நடுவில் திருநங்கை ரியாவின் வெற்றி அசாத்தியமானது.. திருச்செங்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றிபெற்றுள்ளார்.. போன நவம்பர் மாதம் நடந்த திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

    வெற்றி

    வெற்றி

    இதனையடுத்து, திருநங்கைகள் பலரும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதுமட்டுமல்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 2வது வார்டு எஸ்சி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. 2ஆவது வார்டில் திருநங்கை ரியா திமுக சார்பில் போட்டியிட்டார். இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை ஆவார்.

    மாற்றம்

    மாற்றம்

    ஆக... இந்தபாட்டி வீரம்மாள்.. பேத்தி ஜெய்சந்தியா ராணி.. திருநங்கை ரியா என ஒரு மாற்றத்திற்கான துவக்கப்புள்ளியாக இந்த பிரசிடென்ட்டு தேர்தல் ஏற்படுத்தி விட்டது.

    Take a Poll

    English summary
    local body election result: 21 year old girl student and 79 year old woman victories in the panchayat election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X