நாமக்கல் அருகே பேக்கரிக்குள் லாரி புகுந்து விபத்து.. டீ குடித்து கொண்டிருந்தவர் பலி..
நிலைதடுமாறிய லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
Recommended Video
நாமக்கல்: சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, நிலைதடுமாறி அருகிலிருந்த கடையினுள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரம் சாலையில் லாரி ஒன்று படு வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி நிலைதடுமாற ஆரம்பித்தது. இதனால் சாலைகளில் சென்ற கொண்டிருந்தவர்கள் எல்லாம் அலறி ஓடினர். வாகனங்களில் எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்தவர்களும் தடுமாறி தங்களது வாகனங்களை சாலைகளின் ஓரம் நிறுத்த முயன்றனர்.
குறுக்கும் நெடுக்குமாக சென்ற லாரியானது சாலைகளின் இருபுறத்திலும் ஓடி, கடைசியில் அருகிலிருந்த ஒரு லாரி பேக்கரி கடையினுள் புகுந்தது. அப்போது பேக்கரி கடையினுள் டீ குடித்து கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் பெயர் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.