பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது.. பல பேருக்கு தொடர்பு உள்ளது.. டிஎன்பிஎஸ்சி முறைகேடு பற்றி உதயநிதி!
டிஎன்பிஎஸ்சி முறைகேடு மூலம் பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு மூலம் பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது தமிழகத்தை உலுக்கி உள்ளது. தேர்வை நடத்திய அதிகாரிகளே இதில் ஈடுப்பட்டு கடந்த வாரம் அம்பலம் ஆனது. இந்த முறைகேடு தொடர்பாக வரிசையாக பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் திமுக சார்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர் .
ஒரே டைரக்டர்ஸ்.. ஒரே ஹீரோயின்ஸ்.. அதே மாதிரி அரசியலிலும் ரஜினி கமல் சேர வேண்டும்.. சுஹாசினிக்கு ஆசை!
திமுக வெற்றி
இந்த போராட்டம் தொடர்பாக நேற்று உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். அதில், திமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றது. தொண்டர்களின் கடின உழைப்புதான் இந்த வெற்றிக்கு காரணம். லோக்சபா தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றி பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் ஆதரவு எப்போதும் திமுகவிற்கு உள்ளது என்பதை இது காட்டுகிறது.
வெறும் இண்டர்வல்தான்
உள்ளாட்சி கிடைத்த வெற்றி வெறும் இண்டர்வல்தான். இந்த தேர்தலை முடிவை பார்த்து அதிமுக ஆடிப்போய் இருக்கிறது. இதனால் நகராட்சி தேர்தலை நடத்த அதிமுக அச்சப்படுகிறது. நகராட்சி தேர்தலை எப்படியாவது தள்ளிப்போட அதிமுக நினைக்கிறது. நகராட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் திமுக மகத்தான வெற்றியை பெறும் என்பதை கூறிக்கொள்கிறேன்.
மெயின் பிக்சர்
இப்போது இண்டர்வெல் முடிந்துள்ளது. இனிதான் மெயின் பிக்சர் வரவிருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலே கிளைமாக்ஸ். அப்போது திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்பார். பொறுத்திருங்கள். அதிமுகவை தமிழக மக்கள் புறக்கணிக்க போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. இதில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது. அதிமுக அரசின் கையாலாகதனத்தை இது காட்டுகிறது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைவரையும் கைது செய்ய வேண்டும், இதில் பல முக்கியமான நபர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது, என வலியுறுத்தியுள்ளார்.