For Daily Alerts
Just In
உயிருக்கு ஆபத்து.... காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்!
விழுப்புரத்தில் இரண்டு வருடமாகக் காதலித்து வந்த சௌந்தர்யா, தனசேகரன் என்ற காதல் இணையர் கோயில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் குடும்பத்தார் மிரட்டுவதாகக் கூறி விழுப்புரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்
விழுப்புரம்: விழுப்புரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காதல் ஜோடி தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சொல்லி, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த சௌந்தர்யா, தனசேகர் இருவரும் இரண்டு வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். இருவரும் வெவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தார் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
பின்பு, காவல்துறை அந்த செய்தியைக் கேட்ட அவர்களின் பெற்றோர் இருவரையும் மிரட்டியுள்ளனர். இதனால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சி, காதல் ஜோடிகள் விழுப்புரம்காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து தமிழகத்தில் தான் காதலுக்கு எதிரான குற்றங்களும் கொலைச் சம்பவங்களும் அதிகளவில் நடக்கின்றன என ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.
Comments
love threaten police commissioner office villupuram oneindia tamil காதல் திருமணம் பாதுகாப்பு காவல்துறை ஆணையர் விழுப்புரம் ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
In villupuram, Saundarya and Dhanasekaran got married in temple. As they threatened by their parents, they came villupuram police commissioner office seeking security.
Story first published: Saturday, April 8, 2017, 15:35 [IST]