For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக்கடல் காற்றழுத்தம் புயலாக மாறலாம்.. சென்னை உட்பட தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு!

அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

    சென்னை: அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கரையை கடக்காமலேயே தென் தமிழகத்தை ஆட்டிப்படைத்துள்ளது. இதனால் தென் தமிழகம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    கன்னியாகுமரி, நெல்லை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் தென்மாவட்டங்களில் வெள்ள நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

    நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அங்கேயே நீடிப்பதாக கூறினார்.

    மேலும் ஒரு புயலுக்கு வாய்ப்பு

    மேலும் ஒரு புயலுக்கு வாய்ப்பு

    அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தை நோக்கி மேலும் ஒரு புயல் வர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

    நெருங்கும்போது புயலாகும்

    நெருங்கும்போது புயலாகும்

    அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழக கரையை நெருங்கும்போது புயலாக மாறும் என்றும் அவர் கூறினார்.

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    அந்த புயலுக்கு சாகர் என பெயர் சூட்டப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும் தென் மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

    தமிழகத்தில் கனமழை

    தமிழகத்தில் கனமழை

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் டிசம்பர் 6ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    எச்சரிக்கை எதுவுமில்லை

    எச்சரிக்கை எதுவுமில்லை

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சாத்தனூரில் 23 சென்டிமீட்டர்

    சாத்தனூரில் 23 சென்டிமீட்டர்

    சென்னையில் சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனிடையே கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் 23 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    English summary
    The Low depression formed in Bay of bengal will be strong within 36 hours. It may change as cyclone. There is chance for tamilnadu to get one more cyclone said Chennai meteorological center.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X