'ஹை பிரஷர்' அரசியலுக்கு மத்தியில் வங்கக் கடலில் 'லோ பிரஷர்'.. மழை வருமாம்!
சென்னை: நாடு முழுவதும் தேர்தல் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. கூடடணிகள், அதனால் ஏற்படும் குழப்பங்கள், வேட்பாளர் தேர்வு என நாடே செம டென்ஷனுடன் காணப்படுகிறது. மறுபக்கம் கொளுத்த ஆரம்பித்துள்ள வெயில் வேறு. இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாம்.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் கோடி மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.
இதகுதொடர்பாக ரமணன் கூறுகையில், இலங்கைக்கு அருகே வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், குமரி, நெல்லை மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும்.
பட், சென்னையில் வறட்சிதானாம்
மேலும், சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளார்.