For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம், புதுவையில் இடியோடு மழை பெய்யும்- வானிலை மையம்

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Low pressure forms south west Bay of Bengal says MeT office

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 30 முதல் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. தென் மாவட்டங்களில் பெய்த மழையால் அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன.

சென்னையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை இன்று அதிகாலையில் அரைமணிநேரம் பெய்தது.

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறினார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறலாம் என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

English summary
A low pressure area formed over south west Bay of Bengal will bring moderate rain over most places in Tamil Nadu and a few places in the northern coastal districts,said Met office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X