வலுவடையும் லூபன் புயல்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
லூபன் புயல் வலுவடைந்து கொண்டே செல்வதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: லூபன் புயல் வலுவடைந்து கொண்டே செல்வதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லூபன் புயல் காரணமாக தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்பட போவதில்லை. கடலோர மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இந்த புயல் ஓமான் நாட்டை நோக்கி செல்லும் வரை, தமிழகத்தில் அதன் பாதிப்புகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு முன் வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து கொண்டே செல்கிறது.
இது புயல் சின்னமாக மாறியுள்ளது. இதனால் இன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும். இதனால் இன்று கடல் கொஞ்சம் கொந்தளிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
[தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!]
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கடலுக்கு சென்ற சில மீனவர்களின் நிலை என்னவென்று இதுவரை விவரம் வெளியாகவில்லை.
லூபன் புயல் வலுவடைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.