For Daily Alerts
Just In
மறுதேதி குறிப்பிடப்படும் வரை... தினமும் மதுரை எஸ்.பி ஆபீஸில் அழகிரி ஆஜராக உத்தரவு!
மதுரை: நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக நேற்று மதுரை நீதிமன்றம் அளித்த ஜாமீன் படி இன்று காலை எஸ்.பி.அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜரானார் மு.க.அழகிரி.
கடந்த 26ம் தேதி மு.க.அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார் அழகிரி. அதனைத் தொடர்ந்து நேற்று மதுரை ஜேஎம்-1 நீதிமன்றத்தில் ஆஜரான அழகிரி, நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார்.
அப்போது மறு தேதி குறிப்பிடப்படும் வரை தினமும் காலை 10 மணிக்கு நில அபகரிப்பு இன்ஸ்பெக்டர் முன்பு அழகிரி ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணியளவில் மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர் முன்பு ஆஜரானார் அழகிரி.
Comments
English summary
The former union minister M.K.Azhagiri appeared in Madurai SP office as per the order of a Maudrai court in a land grabbing case.
Story first published: Wednesday, September 3, 2014, 13:49 [IST]