திமுக தலைவராக வந்துள்ளேன்.. கருணாநிதியின் திருவாரூர் வீட்டு குறிப்பேட்டில் எழுதிய ஸ்டாலின்!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
Recommended Video
திருவாரூர்: திருக்குவளையில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்குள்ள குறிப்பேட்டில் சிறப்பு குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றுள்ளார். காலை திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அதன்பின் ஸ்டாலின் திருவாரூர் வந்தார். திருவாரூரில் உள்ள கட்சி தலைவர்களுடன், நிர்வாகிகளுடன் உரையாடினார்.
இந்த நிலையில் திருக்குவளையில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்றார் ஸ்டாலின். அங்கு உள்ள வருகை பதிவேட்டில் ஸ்டாலின் சிறப்பு குறிப்பு எழுதினார்.
அதில், தலைவரின் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பலமுறை வந்துள்ளேன். தலைவருடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன்.
இன்று திமுக தலைவராக வந்துள்ளேன். கழகத்தின் தலைவன் ஆனாலும் கூட தலைவர் கருணாநிதியின் தொண்டனாகவே அவரின் வழிபற்றியே என்னுடைய பயணம் தொடரும் என்று ஸ்டாலின் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.