நெல்லை அருகே.. சாமி அருவியில் தோனி செம குளியல்.. திரண்டு வந்து வேடிக்கை பார்த்த ரசிகர்கள்!
நெல்லை அருவியில் தோனி குளித்தார்.
Recommended Video
நெல்லை: நெல்லை அருவியில் குளித்தும், மலையில் டிரக்கிங் செய்தும் தோனி மகிழ்ச்சியடைந்தார்
நெல்லையில் கோவை - மதுரை இடையேயான தமிழ்நாடு பிரீமியர் லீக் இன்று நடைபெற உள்ளது. இந்த விளையாட்டினை டாஸ் போட்டு தொடங்கி வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விமானத்தில் நேற்று மாலை நெல்லை வந்தார்.
அப்போது குண்டாறு பகுதிக்கு சென்ற அவர் அங்கு உள்ள தனியாருக்கு சொந்தமான ரிசார்ட்ஸ்-க்கு சென்றார். சிறிது நேர ஓய்வுக்கு பின், ஜீப்பில் பாதுகாவலர்கள் புடைசூழ மலையில் டிரக்கிங் சென்றார். அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமி அருவிக்கு சென்றார்.
அந்த அருவியில் தோனி குளித்து மகிழ்ந்துள்ளார். அவரது வருகையை அறிந்த அப்பகுதி சுற்றுவட்டார ரசிகர்களும், பொதுமக்களும் அங்கு குவிந்தனர். தங்களது செல்போன்கள் மூலம் தோனியை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனிடையே திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து பகுதியில் இந்தியா சிமெண்ட்ஸின் தொழிற்சாலைக்கும் முதல்முறையாக தோனி வருகை தர உள்ளார்.