For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னாது ஜெயலலிதாவிற்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது 'கோயபல்ஸ்' நடராஜனா?... மதுசூதனன் விளாசல்!

ஜெயலலிதாவிற்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது தான் தான் என்று சொல்லும் கோயபல்ஸ் நடராஜன்,ஜெ. உயிருடன் இருந்த போது ஏன் அதனை சொல்லவில்லை என்று மதுசூதனன் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

குறிஞ்சிப்பாடி : ஜெயலலிதாவிற்கு அரசியலில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தது தான் தான் என்று சொல்லும் கோயபல்ஸ் நடராஜன்,ஜெ. உயிருடன் இருந்த போது ஏன் அதனை சொல்லவில்லை என்று மதுசூதனன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : ஒரு சின்ன பையன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் நான் தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தேன் என்று சொல்லி இருக்கிறார். யாருக்கு சொல்லிக் கொடுத்தார் என்று கூறி இருக்கிறார் தெரியுமா ஜெயலலிதாவிற்கு தான் தான் எல்லாமும் சொல்லிக் கொடுத்தேன் என்கிறார்.

கோயபல்ஸ் நடராஜன் தான் இப்படி பேசியுள்ளார். இவரே இன்னைக்கோ நாளைக்கோ போகிற மாதிரித் தான் இருக்கிறார். நான் எல்லாமே சொல்லிக் கொடுத்தேன், தமிழகத்திற்கான எல்லா திட்டங்களையும் தான் தான் வகுத்தக் கொடுத்ததாக சொல்கிறார்.

இப்போது ஏன் சொல்கிறார் நடராஜன்

இப்போது ஏன் சொல்கிறார் நடராஜன்

இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறார், பதில் சொல்வதற்கு அவர்கள் இல்லை என்பதாலா? நான் அவரை கேட்கிறேன், நடராஜனுக்கு தாலி எடுத்துக் கொடுத்தது யார். அதிமுகவை வைத்து திமுகவை சேர்ந்தவர்களுக்குத் தான் நடராஜன் அனைத்தும் செய்து கொடுத்துள்ளார்.

ஜெ. வின் பணத்தை ஏமாற்றிய நடராஜன்

ஜெ. வின் பணத்தை ஏமாற்றிய நடராஜன்

சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்ட போது 41 லட்சம் ரூபாய் மிச்சம் பிடித்தார். அப்போது சசிகலாவிடம் ஜெயலலிதா அந்தப் பணம் எங்கே எனக் கேட்டார், அதற்கு சசிகலா நடராஜன் எடுத்துக் கொண்டு போய் நிலம் வாங்கி விட்டார் என்று சொன்னார்.

ஜெ. வின் கையால் அடி வாங்கியவர்

ஜெ. வின் கையால் அடி வாங்கியவர்

ஜெயலலிதா நேரடியாக சென்று நடராஜனை சந்தித்து கையில் கிடைத்த ஏதோ ஒன்றை வைத்து அடி அடி என்ற அடித்தார்கள். அன்றிலிருந்து நடராஜனுடன் யார் தொடர்பு வைத்தாலும் அவர்களை கட்டம் கட்டியவர் தான் ஜெயலலிதா.

பதில் சொல்ல யாரும் இல்லை என்பதாலா?

பதில் சொல்ல யாரும் இல்லை என்பதாலா?

நடராஜனுக்கும் அதிமுகவிற்கும் என்ன தொடர்பு. எல்லாவற்றையும் மறைத்து இன்று நாடகமாடுகிறார், பதில் சொல்ல யாரும் இல்லை என்ற நினைப்பா. உன்னை அழிப்பதற்கு சாட்சியாகவே கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருக்கிறார் என்று மதுசூதனன் காட்டமாகச் சொன்னார்.

English summary
ADMK senior leader Madhusudhanan accuses that there is no connection between Natarajan and ADMK. Why Natarajan now saying that he is the one who plans all the speeches of Jayalalitha?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X