மீண்டும் 2015... வெள்ளத்தில் மிதக்கும் மடிப்பாக்கம்... மக்கள் வெளியேறினர்!
சென்னை: கடந்த மூன்று தினங்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக மடிப்பாக்கம் நகரின் தென்பகுதி முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
2015-ம் ஆண்டைப் போலவே வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் வீடுகளிலிருந்து இயன்றவரை பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறி வருகிறார்கள்.
பெரியார் நகர் தொடங்கி, வெளி வட்டச் சாலை வரையிலான தெற்குப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மூன்றடி உயரத்துக்கு மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான வீடுகளின் தரைதளத்துக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
Madipakkam Ram Nagar North Extn #ChennaiRains #chennairain #chennai #TN pic.twitter.com/oR22J1MIni
— Jahith Hussain (@jahith) November 3, 2017
அத்தியாவசியப் பொருட்களான பால், குடிநீர் போன்றவற்றை இந்தப் பகுதிகளில் விநியோகிக்க முடியவில்லை. மின்சாரமும் இரவிலிருந்தே துண்டிக்கப்பட்டுள்ளது.
#ChennaiRains madipakkam mahalakshmi Nagar pic.twitter.com/qqz5X8QLEC
— rajan (@Rajan9018) November 3, 2017
வடகிழக்குப் பருவ மழையின் ஆரம்ப நாட்களிலேயே இவ்வளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மிச்சமிருக்கும் இன்னும் ஒன்றரை மாத கால மழை நாட்களை நினைத்து மக்கள் மிரண்டு போயுள்ளனர்.