For Daily Alerts
Just In
வழக்கத்திற்கு மாறாக மழைக்காலத்தில் பரவும் மெட்ராஸ் ஐ... 3000 பேர் பாதிப்பு - புதிய வைரஸ் காரணமா?
சென்னை: முன் எப்போதும் இல்லாத அளவாக இம்முறை மழைக்காலத்தில் மெட்ராஸ் ஐ அதிகளவில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக மழைக்காலத்தில் மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருகிறது.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் தினமும் சராசரியாக 70 பேர் வீதம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
English summary
Normally, the Madras Eye infection will spread only in summer season, but this time unusually the effect is more in rainy days.
Story first published: Tuesday, November 4, 2014, 11:54 [IST]