Breaking News: 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு!
தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி சுந்தரோ, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால் 3-வது நீதிபதி பெஞ்சுக்கு இவ்வழக்கின் தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்:
தினகரன் தரப்புக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமை வக்கீல் சுப்பிரமணியன் யோசனை
சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம்
நீதிபதி சுந்தரின் தீர்ப்பை முன்வைத்து உச்சநீதிமன்றத்தை அணுகலாம்
சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை உச்சநீதிமன்றம் நிச்சயம் நிறுத்தி வைக்கும்- சுப்பிரமணியன்
கட்சியைக் காப்பாற்ற தங்களது பதவியை தியாகம் செய்தவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: டி.டி.வி தினகரன்
வெற்றிவேலும், தங்க தமிழ்செல்வனும் எனக்கு இரு கண்கள்: டி.டி.வி தினகரன்
இந்த தீர்ப்பை எதிர்த்துப் போராடுவோம் ; நாங்கள் அனைவரும் போராளிகள்: டி.டி.வி தினகரன்
கொறடா உத்தரவை மீறியது ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள்தான்
நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரவேண்டும்- தங்க தமிழ்ச்செல்வன்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்றே தீர்ப்பு வர வேண்டும்
தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் மேல்முறையீடு செய்யமாட்டேன்: தங்க தமிழ்ச்செல்வன்
சென்னையில் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி