For Quick Alerts
For Daily Alerts
Just In
சூரியமின்சக்தி கொள்முதலில் முறைகேடு: நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான மனு தள்ளுபடி!
சென்னை: சூரியமின்சக்தி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், சூரியமின் சக்தி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
இதில் ரூ525 கோடி லஞ்சம் பெற்றதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை இன்று தள்ளுபடி செய்தது.
சூரியமின்சக்தி கொள்முதலால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மின்வாரிய தீர்ப்பாயத்தில் முறையிடலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
Comments
English summary
Madras High court today dismissed the plea against the Former Minister Natham Viswanathan.
Story first published: Wednesday, September 20, 2017, 18:43 [IST]