ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான கடலோர காவல் படை துப்பாக்கிச் சூடு- விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான கடலோர காவல்படையின் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கடல் எல்லைக்குள் நவம்பர் 13-ந் தேதியன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கடலோர காவல்படையினர் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் மீனவர்கள் தமிழில் பேசியுள்ளனர். அவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் பேச வேண்டும் என கடலோர காவல்படையினர் மிரட்டியுள்ளனர்.
ஆனால் இந்தி தெரியாது என மீனவர்கள் கூறியுள்ளனர். இதனால் மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஜான்சன், பிச்சை என்கிற மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மெளரியா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றமே தாமாகவே முன்வந்து விசாரிக்கவும் அவர் கோரியிருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், மீனவர்கள் மீதான கடலோர காவல்படையின் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.