For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலை செய்ய கோரும் நீதிபதி கர்ணனின் மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை விடுவிக்க கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தம்மை விடுதலை செய்ய கோரிய ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் நீதிபதி கர்ணன். அவரை விடுதலை செய்ய ஜனாதிபதி அலுவலகத்தை நாடுவதற்கான வழிகாட்டுதல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

Madras HC rejects plea seeking release of Justice Karnan

டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் கவுதம் சித்தார்த்தன் இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச், இம்மனுவை தள்ளுபடி செய்தது.

அத்துடன், கைது செய்யப்படும் போது கர்ணன் எந்த ஒரு நீதிமன்றத்திலும் நீதிபதியாக இருக்கவும் இல்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

English summary
The Madras High Court rejected a plea for a direction to the President’s office to consider the immediate release of Justice (retd) Karnan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X