For Daily Alerts
Just In
சன் டி.வி சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை ஹைகோர்ட்!!
சென்னை: சன் டி.வி. குழுமத்தின் ரூ742 கோடி சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை முடித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சன் டி.வி. குழுமத்துக்கு சொந்தமான ரூ742 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. இதில் சென்னையில் உள்ள சன். டி.வி. குழுமம் இயங்கி வரும் இடம், கலாநிதி, தயாநிதி மாறன்களின் பங்குகள், வைப்பு நிதி ஆகியவையும் அடங்கும்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கலாநிதி, தயாநிதி மாறன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The Madras high court reserves orders on the Petition filed by Maran brothers against ED's order for attachment of properties worth Rs 742 Cr.
Story first published: Tuesday, June 2, 2015, 17:19 [IST]