For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா? உயர் நீதிமன்றம் கேள்வி

பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கைது செய்யப்படுவது பற்றி பாரதி ராஜாவுக்கு பயம் இல்லையா? - உயர்நீதிமன்றம் கேள்வி- வீடியோ

    சென்னை: இயக்குநர் பாரதிராஜா அபராதம் செலுத்திவிட்டால், செய்த தவறு சரியாகிவிடுமா என்றும் பாரதிராவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரைக்கு பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. இந்த விவகாரத்தில் இயக்குநர் பாரதிராஜா கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    Madras High court questioned Director Bharathiraja, he doesn’t have fear arrested by police.

    இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பாரதிராஜாவுக்கு அபராதம் விதித்திருந்தது.

    இந்நிலையில் இன்று புதன்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன்பு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பாரதிராஜா வழக்கில் அபராதம் செலுத்திவிட்டால் செய்த தவறு சரியாகிவிடுமா என்றும் பாரதிராஜாவுக்கு கைதுசெய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், பாரதிராஜா விவகாரத்தில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று கண்டனம் தெரிவித்தார்.

    English summary
    Madras High court questioned Director Bharathiraja, he don’t have fear that will arrested by police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X