எடப்பாடி தலையில் கை வைத்த மதுரை ஆதீனம்.. ஸ்பெஷல் ஆசி.. மீண்டும் களத்தில்!
இன்று சென்னையிலுள்ள தலைமைச் செயலகம் வந்திருந்தார் மதுரை ஆதீனம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த அவர், தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடியை சந்தித்த மதுரை ஆதீனம், அவரது தலையில் கை வைத்து மதுரை ஆதீனம் ஆசீர்வாதம் செய்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அரசு நிகழ்ச்சிகள் பலவற்றில் முதல் வரிசையில் அமர்ந்து, அரசுக்கு 'ஆசி' வழங்கி வந்தவர் மதுரை ஆதீனம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொது நிகழ்வுகளில் இவரை பார்க்க முடியவில்லை. இந்த நிலையில், இன்று சென்னையிலுள்ள தலைமைச் செயலகம் வந்திருந்தார் மதுரை ஆதீனம். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த அவர், தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்த ஆட்சி 5 வருட காலமும் பூர்த்தி செய்ய எம்எல்ஏக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தினகரன் இருவருக்குமே தனது ஆசி உண்டு என்றும், மோடி அரசு தமிழக அரசுக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்து வருவதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.