நபிகள் நாயகம் பற்றி மதுரை ஆதீனம் பாடல்
இதுதான் இந்தியா.. நபிகள் நாயகம் பற்றி உருக்கும் குரலில் பாடிய மதுரை ஆதீனம்.. வைரல் வீடியோ
மதுரை: மத நல்லிணக்கத்திற்கு உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குவது இந்தியா. இதற்கு மற்றொரு உதாரணமாக வெளியாகியுள்ளது இந்த பாடல்.
பல ஆறுகளும் ஒரே கடலில் கலப்பதை போல, இறைவன் ஒருவனே, பல பெயர்களில், அந்த இறைவனை வணங்கலாம் என்ற வேற்றுமையில் ஒற்றுமை கொள்கை இந்தியாவின் சிறப்பு.
இந்த கொள்கை வேரூன்றி இருப்பதால்தான், பல மதங்களை சேர்ந்தவர்களும், மத வேற்றுமையின்றி, அண்ணன், தம்பி, மாமன், மைத்துனர் போல பழகி வருகிறார்கள். அதிலும் வட இந்தியாவை விடவும் தமிழகம் எப்போதுமே மத ஒற்றுமையில் முன்னிலையில் இருக்கும் மாநிலம்.
இப்போது அதற்கு ஒரு உதாரணமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. மதுரை ஆதீனம், நபிகள் நாயகம் வாழ்க்கை பற்றி பாடிய ஒரு உருக்கமான வீடியோதான் அது. நபிகள் நாயகம் எப்படி ஒரு எளிமையான வாழ்க்கையை நடத்தினார் என்பதை பற்றி, காயல் ஆர்.எஸ்.இளவரசு எழுதிய பாடலை, தனக்கே உரிய தனித்துவ குரலில் பாடி ஈர்த்துள்ளார் மதுரை ஆதீனம். கற்பனையில் நினைத்தாலே.. என தொடங்கும், வைரலாக சுற்றி வரும், அந்த பாடலை நீங்களும் பாருங்கள்.