மதுரை ஆதீனத்திற்கு நெஞ்சுவலி... தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை
மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை: திருஞானசம்பந்தரால் சைவநெறி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம். இதில் 289வது ஆதினமாக பொறுப்பேற்றவர் அருணகிரிநாதர்.
ஆதீனப் பொறுப்பை ஏற்ற இவர், ஆன்மிகப் பணியில் ஈடுபடாமல் அரசியல் அடாவடியில்தான் அதிகம் ஈடுவார். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல் பேசி வந்தவர் மதுரை ஆதினம். அது போன்றே திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பான நித்தியானந்தாவை இளைய ஆதினமாக நியமித்தது உள்ளிட்ட பல பரபரப்பிற்கு பெயர் போனவர் அருணகிரிநாதர்.
அவருக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு அவசர சிகிக்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர் சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி வருவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.