For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு!

ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் ப்ளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

Madurai Bench of the Madras high court orders to ban ban Blue Whale game

Recommended Video

    ப்ளூ வேல் கேமை தடை செய்ய கோரிக்கை-வீடியோ

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் பெஞ்ச் , ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுகக் வேண்டும் என உத்தரவிட்டனர். இது தொடர்பாக மத்திய- மாநில அரசுகள் செப்டம்பர் 7-ந் தேதிக்குள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் ப்ளூவேல் விளையாட்டை தடை செய்வது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் ஆலோசனை வழங்க வேண்டும்; ப்ளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் நடவடிக்கை என ஊடகங்களில் கடுமையாக எச்சரிக்க வேண்டும் எனவும் ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிபிஐசிஐடி போலீஸ் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    The Madurai Bench of the Madras high court today issued order to ban the Blue Whale Game.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X