For Daily Alerts
Just In
சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மதுரை: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிவழங்கக் கோரி மதுரையில் மாற்றுத் திறனாளி ஆசிரியர் கல்வி பட்டதாரிகள் ஆர்ப்பட்டாத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் பட்டதாரிகள், அரசால் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்றும் இன்னும் அவர்களுக்கு பணி வழங்கப்பவில்லை.
இதனால், பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் இன்று காலை முதல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வெளியில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணி அளிக்க கோரியும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை வருடம் தோறும் நடத்தக் கோரியும் இந்த போரட்டத்தினை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Madurai differently able teacher training graduates protest for request posting in special Teacher examination selected teachers.