மாணவியை எரித்துக்கொல்ல முயற்சி... மதுரையில் பயங்கரம்!
மதுரை அருகே 9ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மாணவி மீது இளைஞர் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் இருந்து வெளியே வந்த 9ம் வகுப்பு மாணவி மீது பாலமுருகன் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி மீது இளைஞர் ஒருவர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி வழக்கம் போல பள்ளி முடிந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது அருகில் மறைந்திருந்த இளைஞர் பாலமுருகன் திடீரென மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். பெட்ரோலில் தீப்பிடித்ததில் மாணவியின் உடல் பாதி எரிந்துவிட்டது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாணவியை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்ற இளைஞர் பாலமுருகன் தப்பியோடிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.