நிர்மலா தேவி விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர்கள் 3 பேர் புகார் மனு
நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
Recommended Video
மதுரை: நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் 3 பேர் புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்து வந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளின் படுக்கைக்கு வருமாறு அவரிடம் பயிலும் 4 மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியானது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆளுநர் சார்பில் அமைக்கப்பட்ட சந்தானம் குழு மதுரையில் விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் அந்த போலீஸாரும் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் புகார் கொடுக்க ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் நிர்மலா தேவி மீது மதுரை பல்கலை பேராசிரியர்கள் 3 பேர் புகார் அளித்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் சண்முகராஜா, பாரி பரமேஸ்வரன், ஜெயசந்திரன் ஆகியோர் விசாரணை அதிகாரி சந்தானத்திடம் புகார் அளித்துள்ளனர்.