For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கத்திக்குத்து பட்ட பேராசிரியர் ஜெனிபாவால் பேச முடியவில்லை - வீடியோ

மதுரை காமராசர் பல்கலை கழக பேராசிரியர் ஜெனிபாவின் தொண்டையில் கத்துக்குத்தி பட்டதால் பேச முடியாமல் உள்ளார். அதனால் அவரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளரால் கத்தியால் குத்தப்பட்ட துறைத்தலைவர் ஜெனிபா பேச முடியாமல் உள்ளதால் வாக்குமூலம் வாங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

கடந்த மாதம் 26ஆம் தேதி, காமராசர் பல்கலை கழகத்தில் மொழியியல் மற்றும் தொடர்பியல் துறையின் தலைவராக பணியாற்றி வரும் ஜெனிபாவை, அவரின் கீழ், பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றிய ஜோதிமுருகன் என்பவர் கத்தியால் 32 இடங்களில் குத்தினார்.

Madurai Kamarajar university professor Jenifa unable to talk

அப்போது ஜெனிபாவின் அலறல் சத்தம் கேட்டு, அவரது அறைக்கு ஓடி வந்த மாணவர்கள் ஜெனிபாவை ஜோதிமுருகனிடமிருந்து மீட்டனர். மேலும், கத்தியால் குத்திய ஜோதிமுருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தொண்டையில் கத்தியால் குத்தியதால் தற்போது மருத்துவமனையில் இருக்கும் ஜெனிபாவால் வாக்குமூலம் கொடுக்க முடியவில்லை. இதனால் இந்த வழக்கின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

English summary
In Madurai Kamajar University, Professor Jenifa attacked by his junior and she is unable to talk and it affects case progress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X