For Quick Alerts
For Daily Alerts
Just In
பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் அறிவிப்பு.. மாணவி நந்தினி தந்தையுடன் கைது!
டெல்லியில் வரும் 25ம் தேதியன்று பிரதமர் மோடி வீடு முன்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை: டெல்லியில் வரும் 25ம் தேதியன்று பிரதமர் மோடி வீடு முன்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சட்டக்கல்லூரி மாணவியான நந்தினி. இவர் தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.
மேலும் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் அவர் குரல் எழுப்பி வருகிறார். ஜல்லிக்கட்டு, மதுவிலக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக நந்தினி போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வரும் 25ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி வீட்டு முன்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தார் நந்தினி. இந்நிலையில் போராட்டத்தை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று இரவு நந்தினியையும் அவரது தந்தை ஆனந்தனையும் போலீசார் கைது செய்தனர்.
Comments
English summary
Madurai Law college student Nandhini and her father has been arrested. Nandhini has announced protest front of Prime Minister Modi's house on June 25th.
Story first published: Saturday, June 23, 2018, 12:20 [IST]