இந்தியா வெற்றி பெற மதுரையில் 108 தேங்காய் உடைத்த சிவாச்சாரியார்கள்
மதுரை: உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டி மதுரையில் உள்ள ஆடி வீதி விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் 108 தேங்காய் உடைத்துள்ளனர்.
உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இன்று காலை துவங்கி நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்நிலையில் மதுரையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
மீனாட்சியம்மன் கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆடி வீதி விநாயகர் சன்னதியில் இந்தியா வெற்றி பெற வேண்டி சிவாச்சாரியார்கள் 108 தேங்காய் உடைத்துள்ளனர்.
சிவாச்சாரியார்கள்
டோணி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாட மதுரை திருக்கோவில் சிவாச்சாரியார்கள் இன்று காலை 108 தேங்காய் உடைத்துள்ளனர்.
கிரிக்கெட்
கிரிக்கெட் ஜுரம் சிவாச்சாரியார்களுக்கும் பிடித்துள்ளது. அவர்கள் தேங்காய் உடைத்து வேண்டியதை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெற்றி
மதுரையில் சிவாச்சாரியார்கள் தேங்காய் உடைத்து வேண்டியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்தியா வெற்றி பெற சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.