For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதால் என்கவுண்ட்டர்: மதுரை எஸ்.பி. மணிவண்ணன்

ரவுடிகளை கைது செய்ய வந்த போது துப்பாக்கிச் சூடு நடந்ததால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எஸ்.பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் நடந்த என்கவுண்டர்...பின்னணி என்ன?- வீடியோ

    மதுரை : சிக்கந்தர்சாவடியில் பதுங்கியிருந்த ரவுடிகளை கைது செய்ய வந்த போது அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால் தற்காப்புக்காக போலீசார் என்கவுண்டர் செய்ய நேரிட்டதாக எஸ்பி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

    என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறை எஸ்.பி மணிவண்ணன் கூறியதாவது : கொலைக்குற்றம் தொடர்பாக ரவுடிகளை கைது செய்ய வந்தோம். அப்போது ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டனர், தற்காப்புக்காக போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    Madurai SP Manivannan says as preventionary measure encounter takes place

    ரவுடிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதை மருத்துவர்கள் தான் சொல்ல வேண்டும்.

    ரவுடிகள் இரண்டு பேரில் ஒருவர் சகுனி கார்த்திக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொருவர் மந்திரி என்கிற முத்து இருணாண்டி என்று கூறப்படுகிறது. அவர்கள் இந்த வீட்டிற்கு எப்போது வந்தார்கள், இது அவர்களின் சொந்த வீடா என்றெல்லாம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. முழுமையான விசாரணை நடத்திய பின்னர் என்கவுண்டர் பற்றி விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று மணிவண்ணன் கூறியுள்ளார்.

    English summary
    Madurai SP Manivannan says as preventionary measure encounter takes place, injured rowdies taken to government hospital doctors only declare whether they were live or not.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X