For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றங்களையும், டிராபிக் நெரிசலையும் குறைப்பதே முதல் இலக்கு: சென்னை கமிஷனர் அதிரடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதே எனது முதல் நோக்கமாக இருக்கும் என்று நகர போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கரண் சின்ஹா தெரிவித்தார்.

ஆர்கே நகர் தேர்தலில் ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயல்படுவார் என திமுக தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய புகார் காரணமாக, ஏற்கனவே கமிஷனராக இருந்த ஜார்ஜ் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் கரண் சின்ஹா இன்று கமிஷனராக பதவியேற்றார்.

Maintaining Law and order is my prime moto, says Karan Sinha

சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது எனது முதல் நோக்கம். டிராபிக் பிரச்சினைகளை சமாளிப்பதிலும் கவனம் செலுத்துவேன். என்னிடம் சிறந்த ஆபீசர்கள் அடங்கியுள்ள டீம் உள்ளது. ஒவ்வொன்றாக ஆய்வு செய்து டிராபிக் பிரச்சினையை குறைப்பேன். குற்றங்களை குறைப்பது முதல் குறிக்கோளாக இருந்தபோதிலும், டிராபிக் பிரச்சினையையும் சரி செய்வேன்.

இன்று முதல் தொடர்ந்து பல ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க உள்ளது. ஆர்கேநகரில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட சிறப்பான அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Maintaining Law and order is my prime moto, says Chennai police commissioner Karan Sinha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X