For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் விஜயகாந்த் தான் பொறுப்பு: வி.சி சந்திரகுமார் பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு விஜயகாந்த் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற மக்கள் தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற அக்கட்சியின் தலைவர் சந்திரகுமாருக்கு எதிராக தேமுதிகவினர் ஊர் எல்லையில் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Makkal DMDK has to claim reponsibility, If we face any violence issues- chandrakumar

இது குறித்து மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது, உங்கள் ஊருக்கு மக்கள் தேமுதிக என்று வந்தால் அவர்களை வர அனுமதிக்காதீர்கள். அந்தக் கூட்டத்தில் கலாட்டா செய்து, சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

இதனை எங்களால் நிரூபிக்க முடியும். இருந்தபோதிலும் நாங்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில், நாங்கள் போகின்ற இடங்களில் எங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ, எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ தேமுதிகவும், அதன் தலைவர் விஜயகாந்த்தும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

English summary
Makkal DMDK leader V C Chandrakumar said that If he faced any violence issue, Vijayakanth had to claim the full responsibility of the issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X