4 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல்... மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் மே 19ம் தேதி 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மைய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலுடன், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் தமிழகத்தில் நடந்து முடிந்தது.
இதையடுத்து வரும் மே 19ம் தேதி காலியாக உள்ள திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளுக்கும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி மக்களை கொன்று குவித்ததால் 2 இயக்கங்களுக்கு தடை.. இலங்கை நடவடிக்கை
இதன் படி சூலூரில் மயில்சாமி, அரவக்குறிச்சியில் மோகன்ராஜ், திருப்பரங்குன்றத்தில் சக்திவேல், ஒட்டப்பிடாரத்தில் வளரும் தமிழகம் கட்சியைச் சேர்ந்த காந்தி ஆகியோர் மக்கள்நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொகுதிகளுக்கும் ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இப்போதும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து இருப்பதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.