ஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கல்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த பீடாதிபதி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் இறந்துள்ள நிலையில் அவருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
காஞ்சிபுரம்: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காஞ்சி சங்கரமடத்தின் மூத்த பீடாதிபதி ஜெயேந்திரருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சியினர், திரைபிரபலங்கள் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கமல்ஹாசன் புதிதாக தொடங்கிய மக்கள் நீதி மய்யம் சார்பிலும் ஜெயேந்திரருக்கு இரங்கல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஜெயேந்திரர் இறந்த செய்தி கேட்டு வருந்தினோம் என்றும் அவரது இறப்பால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.