For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியாகுமரியில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் கண்டெடுப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி

அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்றினை போலீஸார் மீட்டனர்.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

குமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பொற்றையடி கிராமம். இங்கு கிருஷிகுளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில், இன்று காலை ஆணின் பிணம் அரைகுறையாக எரிந்த நிலையில், கிடந்ததை அவ்வழியாக சென்றோர் பார்த்துள்ளனர்.

Male body detection in Kanniyakumari

இதனால் அதிர்ச்சியுற்ற அவர்கள் உடனடியாக அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து போலீசார் பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்த உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

35 வயது மதிக்கத்தக்க அந்த நபரை கொலை செய்தவர்கள், பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்து போட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

English summary
A male corpse was found in the semi-burned area. The Police had seized the body lying in the furrows and sent them to Nagercoil Government Hospital for post mortem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X