For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மாநில தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் பொறுப்பேற்பு

மாநில தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மாநில தேர்தல் ஆணையராக இருந்த சீத்தாராமன் ஓய்வு பெற்றதை அடுத்து அவரது காலி இடத்தை நிரப்பும் வகையில் புதிய தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை மே 14ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாநில தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Malik Feroze Khan IAS appointed TN State Election Commissioner

தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணையராக இருந்த சீத்தாராமன் கடந்த மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து மாநில தேர்தல் ஆணையர் பதவி காலியானது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் சிக்கல் உருவானது.

இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையராக மாலிக் ஃபெரோஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மாநில தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழக ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பணியாற்றி கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மாலிக் பெரோஸ்கான் தற்போது தேர்தல் ஆணையராக மீண்டும் பணிக்கு திரும்புகிறார்.

மாலிக் ஃபெரோஸ்கான் ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். அதேபோல், பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றியுள்ளார். முக்கியமாக, உள்ளாட்சித் துறையிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் ஃபெரோஸ்கான். இவர் இன்று சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு ஃபெரோஸ்கானுக்கு உள்ளது. அறிவிப்பானை வெளியிடுவாரா ஃபெரோஸ்கான்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையம் மாலிக் ஃபொரோஸ்கானுக்கு ஆணையத்தின் செயலாளர் தா. கு. ராஜசேகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

•1991 ஐ ஏ எஸ் ஆக முதலில் பணியில் இணைந்தார்.
•பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலாளர்.
•கைத்தறித்துறை ஆணையர்.
•விலங்குகள் நல்லா ஆணையர்.
•தொழில்துறை இணைச்செயலர்.
•ஊரகவளரச்சி சிறப்புச்செயலர்.
•சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர்.
•31-3-14 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணி ஓய்வு.
•தற்போது மாநிலத் தேர்தல் ஆணையர்.

English summary
Tamil Nadu Governor has appointed, Malik Feroze Khan IAS IAS, as the Tamil Nadu StateElection Commissioner for a period of two years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X