மதிமுகவினரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர்: சிவசேனாவினர் மீது மல்லை சத்யா புகார்
சென்னை: மதிமுகவினரை சிவசேனா கட்சியினர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக மல்லை சத்யா குற்றம் சாட்டினார். முகத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு காரில் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளுக்கு எதிராக போராடுவதால் மதிமுகவினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மதிமுக அலுவகத்தை இன்று சிவசேனா முற்றுகையிடுவதாக அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை எழும்பூரில் மல்லை சத்யா தலைமையில் மதிமுக தொண்டர்கள் குவிந்தனர். கையில் உருட்டுக்கட்டையுடன் மதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, மதிமுக-வினரை சிவசேனா கட்சியினர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டினார். முகத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு காரில் வந்ததாகவும், போலீஸ் பாதுகாப்புடன் சிவசேனா கட்சியினர் வந்ததால் இது அரசு ஏற்பாடாக இருக்குமோ என ஐயப்படுவதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதுக்கடைகளுக்கு எதிராக போராடுவதால் மதிமுக-வினர் மீது தாக்குதல் நடத்த திட்டம் என மல்லை சத்யா குற்றம் சாட்டினார்.