மூன்றாவது அணி: மு.க.ஸ்டாலினுடன் மமதா பானர்ஜி தொலைபேசியில் ஆலோசனை
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
சென்னை: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்குவோம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீரென அழைப்பு விடுத்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கலாம் என விடுக்கப்பட்ட அழைப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் மம்தா. அப்போது அவர் கூறுகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்வைத்த மாற்று அணி கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்.
பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தற்போது பலமிழந்து வருகிறது. இதனால் காங்கிரஸை தனிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தேசிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.