For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கி வரிசையில் நின்ற முதியவர் பலியானது துரதிருஷ்டவசமானது: தமிழிசை சவுந்தரராஜன்

வங்கி வரிசையில் நின்று முதியவர் பலியானது துரதிருஷ்டவசமானது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தஞ்சாவூர் அருகே வங்கி வரிசையில் நின்ற முதியவர் பலியானது துரதிருஷ்டவசமானது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

Man dies in Bank Unfortunate, says Tamilisai Soundrarajan

சேலம் உருக்காலையை தனியார் மயம் ஆக்கக்கூடாது என்று தமிழக பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். துறையூரில் நடந்த பட்டாசு ஆலை விபத்து துயரமானது. உயிர் இழந்தவர்களுக்கு சரியான நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்று போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர் அருகே வங்கியில் பணம் எடுக்க சென்ற முதியவர் உயிர் இழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அவருக்கு வரிசையில் நின்றவர்கள் உதவவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இது மனிதாபிமானம் அற்ற செயல்.

பணத்தட்டுப்பாட்டை போக்க வங்கி அதிகாரிகள் நிர்வாக முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

English summary
TN BJP leader Tamilisai Soundrarajan said that man died in Bank, near Thjanuvr was unfortunate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X