வீ்ட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணைக் கட்டிப் பிடித்து “உம்மா” கொடுத்த வாலிபர் கைது!
சேலம்: சேலத்தில் வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் லோகநாதன். பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் கொரியர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மகள் அஸ்வினி. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அஸ்வினி விடுமுறையில் தன்னுடைய வீட்டுக்கு வந்துள்ளார்.
ஏற்கனவே அஸ்வினியை லோகநாதன் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை 11 மணியளவில் அஸ்வினி வீட்டு வாசலில் தனியாக நின்றிருந்த போது அங்கு சென்ற லோகநாதன் திடீரென, அஸ்வினியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சில்மிஷம் செய்துள்ளார்.
இதைக் கண்ட அஸ்வினி கூச்சல் போட்டுள்ளார். இதனால் பயந்து போன வாலிபர் லோகநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அசோக்குமார் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் லோகநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.