16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மகன் – துணை போன தாய், தந்தை!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய மகனுக்கு உடந்தையாக இருந்ததாக தாய் மற்றும் தந்தை கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி நகரிலுள்ள பழையபேட்டை மேல்தெருவைச் சேர்ந்தவர் காய்காரர் துரை. இவரது மகன் சிலம்பரசன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சிலம்பரசன் கிருஷ்ணகிரி பழைய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வீட்டிற்குச் சென்ற சிறுமியை வழி மறித்த சிலம்பரசன் என்னுடன் வரவில்லையென்றால் உன் அம்மா, அப்பா, அண்ணனை எல்லாம் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் பயந்து போன சிறுமியை வலுக்கட்டாயமாக சிலம்பரசன் திருவண்ணாமலை அருகே உள்ள நஞ்சமங்கலம் கிராமத்தில் உள்ள தனது சகோதரி சரண்யா வீட்டில் அடைத்து வைத்து ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகார் மனுவில் எங்களது மகளை சிலம்பரசன் கடத்திக்கொண்டு போய் மறைத்து வைத்துக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் இதற்கு சிலம்பரசனின் தந்தை காய்காரதுரை, தாயார் வள்ளி, சிலம்பரசனின் சகோதரி சரண்யா, அவரது கணவர் மணி ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் சிலம்பரசன் காய்காரதுரை வள்ளி, சரண்யா, மணி ஆகிய 5 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக காய்காரதுரை வள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிலம்பரசன், மணி, சரண்யா ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.