For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடும்ப பிரச்சனையில் ஆத்திரம்- மனைவி, மாமியாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன் கைது!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மனைவி மற்றும் மாமியாரை துப்பாகியல் ஒருவர் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகே உள்ள போலையர்புரத்தை சேர்ந்தவர் தேவபாண்டியன்.

இவர் தட்டார்மடத்தில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

காதலித்து திருமணம்:

இவரது மகள் ஜெனிபா. இவரும் அதே பகுதியை சேர்ந்த அற்புதமணி மகன் ஜெபரிபால் என்பவரும் காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சென்னையில் வாசம்:

இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர்.

சொந்த ஊர் திரும்பிய தம்பதி:

கடந்த 4 மாதத்திற்கு முன்பு அவர்கள் தங்களது சொந்த ஊரான போலையர்புரத்திற்கு வந்து விட்டனர். அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

குழந்தைக்கு உடல்நலக் குறைவு:

ஜெபரிபால் திசையன்விளை பகுதியில் உள்ள தனியார் மணல் ஆலையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெபரிபாலின் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

தாய் வீட்டுக்கு சென்ற ஜெனிபா:

இதையடுத்து ஜெனிபா தனது கணவரிடம் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் நான் எனது தாய் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு குழந்தையுடன் சென்று விட்டார்.

அடிக்கடி தகராறு:

பல நாட்கள் ஆகியும் அவர் கணவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஜெபரிபால் பலமுறை ஜெனிபா வீட்டிற்கு சென்று அழைத்தும் அவர் வரவில்லை.

மாமனாருக்கு தொலைபேசி அழைப்பு:

இந்நிலையில் நேற்றிரவு 10 மணிக்கு ஜெபரிபால் தனது மாமனார் தேவபாண்டியனுக்கு போன் செய்தார்.

மிரட்டிய மருமகன்:

அப்போது அவர், "உங்களது மகளை என்னுடைய வீட்டிற்கு அனுப்பி வையுங்கள், இல்லையென்றால் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று விடுவேன்" என்று மிரட்டினாராம். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாமல் தேவபாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கி விட்டனர்.

நாட்டு துப்பாக்கியால் சுட்டார்:

நள்ளிரவு 11 மணியளவில் மாமனார் வீட்டிற்கு சென்ற ஜெபரிபால் நைசாக கதவை திறந்து அங்கு தூங்கி கொண்டிருந்த மனைவி ஜெனிபா, மாமியார் ராஜபரிமளம் ஆகியோர் மீது நாட்டு துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் இருவருக்கும் வலது கை மற்றும் வயிறு பகுதியில் குண்டு பாய்ந்தது.

மடக்கிப் பிடித்த மக்கள்:

துப்பாக்கி சத்தம் கேட்டு விழித்தெழந்த தேவபாண்டியன் மற்றும் அக்கம்பக்கத்தினர் தப்பியோட முயன்ற ஜெபரிபாலை மடக்கி பிடித்தனர். பின்னர் தட்டார்மடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

கைது செய்த போலீசார்:

உடனடியாக போலீசார் விரைந்து வந்து ஜெபரிபாலை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை:

குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த தாய் மற்றும் மகள் இருவரும்பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி உரிமம் பற்றி விசாரணை:

கைதான ஜெபரிபால் துப்பாக்கி வைத்து கொள்ள உரிமம் வைத்துள்ளாரா அல்லது கள்ளத்துப்பாக்கியா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Man shot his wife and mother-in-law in a family problem. Police arrested him and investigating about this gunshot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X