For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தஞ்சையில் பெ.மணியரசன் மீது தாக்குதல்- வீடியோ

    தஞ்சாவூர்: தமிழ் தேசிய பேரியக்க தலைவரும், காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.

    பெ.மணியரசன் காவிரி பிரச்சனை, மரபணுமாற்ற விதைகள், ஹைட்ரோ கார்ப்பன், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக குரல் எழுப்பி வருபவர்.

    Maniyarasan attacked in Tanjore

    நேற்று இரவு 9.15 மணி ரயிலில் தஞ்சையிலிருந்து சென்னை வர இவர் டிக்கெட் எடுத்திருந்தார். இதையடுத்து உதவியாளர் ஒருவர் பைக்கை செலுத்த பின்னால் அமர்ந்தபடி ரயில் நிலையம் நோக்கி இரவு 8.30 மணியளவில் கிளம்பினார்.

    பைக், நட்சத்திர நகர் என்ற பகுதியில் சென்றபோது, எதிரே ஒரு பைக்கில் வந்த இருவர், மணியரசின் கையை பிடித்து கீழே இழுத்து தள்ளி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

    இந்த சம்பவத்தில், மணியரசன், கை, கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து மணியரசன் தஞ்சாவூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    English summary
    P Maniyarasan, president, Tamil Desa Periyakkam and Cauvery Urimai Meetpu Kuzhu, has been under attack in Tanjore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X