For Daily Alerts
Just In
காவிரி போராட்டம்: சென்னை புழல் சிறையில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை
காவிரி போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட மன்சூர் அலிகான் விடுதலை செய்யப்பட்டார்.
Recommended Video
மன்சூர் அலிகான் விடுதலை , எஸ் வி சேகரால் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னையில் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அப்போது சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் சீமானை போலீஸ் பல வழக்குகளில் கைது செய்யப் போவதாக தகவல் வெளியானது. இதனால் கொந்தளித்த மன்சூர் அலிகான் போராட்டம் நடத்தினார். இதையடுத்து மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13-ந் தேதி முதல் சென்னை புழல் சிறையில் மன்சூர் அலிகான் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இதனடிப்படையில் இன்று மன்சூர் அலிகான் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
Comments
cauvery tamilnadu protest mansoor ali khan puzhal காவிரி தமிழகம் போராட்டம் மன்சூர் அலிகான் புழல் சிறை
English summary
Actor Mansoor Ali khan released from Puzhal jail on today.
Story first published: Wednesday, April 25, 2018, 8:06 [IST]