இன்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கோவை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது இன்னும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சமயங்களில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் மாலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல். கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும். மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு